பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானிக்கு எதிரான மனு, முன் கூட்டியே விசாரிக்கப்படும்' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில், சதி செய்ததாக, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி மற்றும் 19 பேருக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை, அலகாபாத் ஐகோர்ட், ரத்து செய்தது. இதை எதிர்த்து, சி.பி.ஐ., சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், மேல் முறையீடு செய்யப்பட்டது. "இந்த வழக்கின் விசாரணை, டிசம்பரிலிருந்து துவங்கும்' என, சுப்ரீம் கோர்ட், ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், "இந்த வழக்கை, முன் கூட்டியே விசாரிக்க வேண்டும்' என, சி.பி.ஐ., தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில், புதிதாக, ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி, ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான,"பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தபோது, "முன் கூட்டியே விசாரிப்பதற்கு, அத்வானி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து, அத்வானி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட டிசம்பருக்கு பதிலாக, அக்டோபர் மாதம், முதல் வாரத்திலிருந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என, நீதிபதிகள் தெரிவித்தனர்
சிரியா மீது ஏவுகணைகள் தாக்குதலா? அமெரிக்கா மறுப்பு
சிரியாவில் அதிபர் ஆசாத் படை இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி பொதுமக்கள் 1400 பேரை கொன்றது என்று ஐ.நா. ஆய்வாளர்கள் உறுதியாக கூறியுள்ளனர். இதனையடுத்து அமெரிக்கா, சிரியாவின் மீது போர் தொடுக்க செனட் சபையின் ஒப்புதலுக்காக அதிபர் ஒபாமா காத்திருக்கிறார். இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் அமெரிக்காவின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து சிரியா நேக்கி ஏவுகணைகள் வீசப்பட்டதாக ரஷ்யாவில் செய்தி வெளியானது. இன்று காலை 10.16 மணியளவில் கிழக்கு கடற்கரை நோக்கி வீசப்பட்ட 2 ஏவுகணைகள் கடலில் விழுந்துள்ளது. இதனை தெற்கு ரஷ்யாவில் உள்ள அர்மாவிர் எச்சரிக்கை மையத்தின் ராடார்கள் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் இதனை ரஷ்ய அரசு உறுதிப்படுத்த வில்லை. ஏவுகணைகள் வீசப்பட்டதாக வெளியான தகவலை சிரியாவில் உள்ள ரஷ்ய தூதரகமும், இஸ்ரேலும் மறுத்துள்ளது. தங்கள் நாட்டிற்குள் ஏவுகணைகள் எதுவும் விழுந்து வெடிக்கவில்லை என்று சிரியா தெரிவித்துள்ளது.
மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து அமெரிக்க விமானங்களோ, கப்பல்களோ ஏவுகணைகளை வீசவில்லை என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பாக அதிபர் புதினுக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்தார். எனவே, சிரியாவில் மேற்கு நாடுகளின் ராணுவ நடவடிக்கை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து சிரியா நேக்கி ஏவுகணைகள் வீசப்பட்டதாக ரஷ்யாவில் செய்தி வெளியானது. இன்று காலை 10.16 மணியளவில் கிழக்கு கடற்கரை நோக்கி வீசப்பட்ட 2 ஏவுகணைகள் கடலில் விழுந்துள்ளது. இதனை தெற்கு ரஷ்யாவில் உள்ள அர்மாவிர் எச்சரிக்கை மையத்தின் ராடார்கள் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் இதனை ரஷ்ய அரசு உறுதிப்படுத்த வில்லை. ஏவுகணைகள் வீசப்பட்டதாக வெளியான தகவலை சிரியாவில் உள்ள ரஷ்ய தூதரகமும், இஸ்ரேலும் மறுத்துள்ளது. தங்கள் நாட்டிற்குள் ஏவுகணைகள் எதுவும் விழுந்து வெடிக்கவில்லை என்று சிரியா தெரிவித்துள்ளது.
மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து அமெரிக்க விமானங்களோ, கப்பல்களோ ஏவுகணைகளை வீசவில்லை என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பாக அதிபர் புதினுக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்தார். எனவே, சிரியாவில் மேற்கு நாடுகளின் ராணுவ நடவடிக்கை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீர்மின் நிலையத்துக்காக காவிரியின் குறுக்கே அணை கட்ட அனுமதிக்க கூடாது: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு நீர்மின் திட்டத்துக்காக அணை கட்ட திட்டமிட்டுள்ள விவகாரத்தை உங்கள் கவனத்துக்கு அவசரமாக கொண்டு வருகிறேன்.
கர்நாடக சட்ட மந்திரி இதுதொடர்பாக கூறியுள்ள தகவல்கள் பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளன. அதில், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் நீர்மின் சக்தி திட்டத்துக்காக அணைகட்டபோவதாக கூறியுள்ளார். அங்கு 3 இடங்களில் அணை கட்ட போவதாகவும், மேலும் ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர் அணைகளின் உபரி தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்துவதற்காக ரூ. 500–ல் இருந்து ரூ.600 கோடி செலவில் திட்டங்களை உருவாக்கி இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
காவிரி நடுவர்மன்றத்தின் இறுதி உத்தரவுக்கு மாறாக இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன என்பதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். காவிரி நடுவர்மன்றம் காவிரி நீரை பயன்படுத்துவது தொடர்பாக வரையறை செய்துள்ள நிலையில் அவர்கள் திட்டங்களை உருவாக்கி உள்ளனர்.
கர்நாடகாவின் இந்த செயல் முற்றிலும் சட்ட விரோதமானது. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளனர். மேலும், காவிரியின் இயற்கை நீரோட்டத்தை தடுப்பதுடன் தமிழ்நாட்டின் பாசன வசதியை கடுமையாக பாதிக்கும் செயலையும் செய்துள்ளனர்.
காவிரி விவகாரம் தொடர்பாக காவிரி நடுவர்மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்புக்கு எதிராக இவை அனைத்தும் அமைந்துள்ளன. எனவே, கர்நாடக அரசு இந்த திட்டங்களை கீழ்பாசன மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுத்த அனுமதிக்க கூடாது. காவிரி நடுவர் மன்றம் அளித்த உத்தரவுபடி காவிரி மேலாண்மை குழு இன்னும் அமைக்கப்படவில்லை. எனவே காவிரி நீர் பயன்பாட்டை முறையாக கண்காணிக்க எந்த அமைப்பும் இல்லை. இந்த நேரத்தில் கர்நாடக அணை கட்ட திட்டமிடுவது காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக இருப்பதோடு மட்டுமல்லாது கூட்டாட்சி தத்துவத்துக்கும் எதிராக அமைந்திருக்கிறது.
மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளை பொறுத்தவரையில் கீழ்பாசன மாநிலங்கள் அனுமதி இல்லாமல் மேல்பாசன பகுதி மாநிலங்கள் எந்த கட்டுமானங்களையும் செய்யக்கூடாது என்பது கூட்டாட்சி முறையாகும். ஆனால் அதை கர்நாடகா மீறுகிறது.
மேலும் மேகதாது மின் உற்பத்தி திட்டம், சிவசமுத்திரம் அணை திட்டம், ஒகேனக்கல், ரசிமனால் நீர்மின் திட்டம் போன்ற திட்டங்கள் தொடர்பாக தமிழ்நாடு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து உள்ளது. இந்த திட்டங்களை தேசிய நீர்மின் உற்பத்தி கழகம் அல்லது மத்திய அரசின் மின்உற்பத்தி அமைப்பு ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தலாம் எனவும் கூறியிருந்தோம். இந்த விவகாரம் கோர்ட்டில் இருக்கும்போது அவர்கள் தன்னிச்சையாக அணை திட்டங்களை உருவாக்குவது கோர்ட்டுக்கு எதிரானதாகும்.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி காவிரி நடுவர் மன்ற மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுங்குமுறை குழுவையும் அமைக்க வேண்டும் என்று மத்திய நீர்வள துறைக்கு உத்தரவிடுமாறு உங்களை நான் பலமுறை வற்புறுத்தி வருகிறேன். ஆனால் இதுவரை அது அமைக்கப்படவில்லை.
இந்த சூழ்நிலையில் நீங்கள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு கர்நாடகாவுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். காவிரி படுகையில் தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் மின்உற்பத்தி திட்டம் உள்ளிட்ட எந்த திட்டங்களையும் உருவாக்க கூடாது என்று கூற வேண்டும். மேலும் காவிரி கண்காணிப்பு குழு அமைக்கப்படும் வரை இந்த திட்டங்களுக்கு அனுமதி அளிக்க கூடாது என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை நிர்வாகத்திற்கு நீங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்தில் நீங்கள் உடனடி தலையிட்டு சாதகமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
மும்பை அருகே கார் மோதியதால் பம்பரமாக சுழன்ற வேன்: கண்காணிப்பு கேமராவில் பதிவானது
மும்பையில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நவி மும்பையில் கடந்த 6-ம் தேதி நடந்த பயங்கர விபத்து, இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
6-ம் தேதி இரவு 11 மணியளவில் சிக்னல் அருகே அதிவேகமாக வந்த ஒரு சொகுசு கார், வேன் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதனால் நிலைகுலைந்த அந்த வேன் பம்பரமாக சுழன்றது. உள்ளே இருந்த 4 பேர் வெளியில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அவர்களில் ஒருவர் பரிதாபமாக இறந்தார். குலைநடுங்க வைக்கும் இந்தக் காட்சிகள் அங்குள்ள பாதுகாப்பு கேமராவில் பதிவானது.
சம்பவம் நடந்து சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, வீடியோவில் பதிவான காட்சிகளை நவி மும்பை காவல்துறை வெளியிட்டுள்ளது. விபத்துக்கு காரணமான சொகுசு காரை ஓட்டி வந்த பியூட்டி பார்லர் உரிமையாளர் சீமா தாக்கூர் கைது செய்யப்பட்டு, உடனடியாக ஜாமினில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
குடிபோதையில் அவர் கார் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதுதொடர்பான அறிக்கை இதுவரை வெளியிடவில்லை.
6-ம் தேதி இரவு 11 மணியளவில் சிக்னல் அருகே அதிவேகமாக வந்த ஒரு சொகுசு கார், வேன் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதனால் நிலைகுலைந்த அந்த வேன் பம்பரமாக சுழன்றது. உள்ளே இருந்த 4 பேர் வெளியில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அவர்களில் ஒருவர் பரிதாபமாக இறந்தார். குலைநடுங்க வைக்கும் இந்தக் காட்சிகள் அங்குள்ள பாதுகாப்பு கேமராவில் பதிவானது.
சம்பவம் நடந்து சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, வீடியோவில் பதிவான காட்சிகளை நவி மும்பை காவல்துறை வெளியிட்டுள்ளது. விபத்துக்கு காரணமான சொகுசு காரை ஓட்டி வந்த பியூட்டி பார்லர் உரிமையாளர் சீமா தாக்கூர் கைது செய்யப்பட்டு, உடனடியாக ஜாமினில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
குடிபோதையில் அவர் கார் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதுதொடர்பான அறிக்கை இதுவரை வெளியிடவில்லை.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராஜ்யசபாவில் எதிர்ப்பு : திரிணமுல், இடதுசாரி எம்.பி.,க்கள் வெளிநடப்பு
பெட்ரோல் விலை உயர்வு, ராஜ்யசபாவில் நேற்று எதிரொலித்தது. மத்திய அரசு மீது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கினர். சபையில் விவாதம் நடத்த, அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, திரிணமுல் மற்றும் இடதுசாரி கட்சி உறுப்பினர்கள், வெளிநடப்பு செய்தனர்.
கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரித்து விட்டதாக கூறி, பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 2.35 ரூபாயும், டீசல் விலை, லிட்டருக்கு, 50 காசுகளும், இரண்டு நாட்களுக்கு முன், உயர்த்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, சமையல் "காஸ்' மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளையும், கணிசமாக உயர்த்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பிரச்னை, ராஜ்யசபாவில், நேற்று எதிரொலித்தது. மார்க்சிஸ்ட் உறுப்பினர், பிரசாந்தா சட்டர்ஜி, பேசியதாவது: கடந்த மூன்று மாதங்களில், இதுவரை, ஆறு முறை, பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சாதாரண மக்கள், பெரும் அவதி அடைந்துள்ளனர். மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. மத்திய அரசு, தவறு செய்து விட்டு, அதன் சுமையை, மக்கள் மீது சுமத்துகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.
பா.ஜ., உறுப்பினர், வெங்கய்யா நாயுடு,""பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடக்கும்போது, பார்லி.,க்கு வெளியில், விலை உயர்வை அறிவித்தது, தவறானது. இது, மக்கள் விரோத நடவடிக்கை. பெட்ரோல் பங்குகளை இரவு நேரத்தில் மூடுவதற்கு உத்தரவிட்டது குறித்து, விவாதம் நடத்த வேண்டும்,''என்றார்.
திரிணமுல் காங்., உறுப்பினர், டெரக் ஓ பிரெயன் பேசுகையில்,""பெட்ரோல் விலையை உயர்த்தியதன் மூலம், நாட்டு மக்கள் மீது, காங்கிரஸ் கட்சி, போர் தொடுத்துள்ளது. பெட்ரோல் பங்குகளை, இரவு நேரத்தில் அடைக்க வேண்டும் என, அமைச்சர் வீரப்ப மொய்லி கூறுவதும், மோசமான கருத்து,''என்றார்.
இந்த பிரச்னையால், கடும் அமளி ஏற்பட்டதை அடுத்து, 15 நிமிடங்களுக்கு சபை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும், சபை கூடியதும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர், சீதாராம் யெச்சூரி, மறுபடியும், இந்த பிரச்னையை எழுப்பினார். அவர் பேசுகையில்,""பெட்ரோல் விலை உயர்வை, வாபஸ் வாங்க வேண்டும். இது தொடர்பாக, சபையில், இப்போதே விவாதம் நடத்த வேண்டும்,'' என்றார்.
ராஜ்யசபா துணை தலைவர், குரியன், இதை ஏற்க மறுத்ததை அடுத்து, இடதுசாரி கட்சி உறுப்பினர்களும், திரிணமுல் காங்., உறுப்பினர்களும், சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
நிலக்கரி ஊழல் : பா.ஜ., பாய்ச்சல் : நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு குறித்த முக்கிய ஆவணங்கள் மாயமானது குறித்த பிரச்னையை, ராஜ்யசபாவில் நேற்று, பா.ஜ., எம்.பி., பிரகாஷ் ஜாவேடகர் எழுப்பினார். அவர் பேசியதாவது: நிலக்கரி ஊழல் என்பது, பிரமாண்டமான ஊழல். அது தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கேள்வி கேட்டபோது,"நான் என்ன, ஆவணங்களை காக்கும் வேலையையா செய்கிறேன்' என, பிரதமர், எரிந்து விழுகிறார். ஆவணங்களை மட்டுமல்ல; நாட்டையும் பாதுகாக்க வேண்டிய கடமை, அவருக்கு உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த இரண்டு வேலைகளையுமே, அவர், ஒழுங்காக செய்யவில்லை. இதுகுறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு, பிரகாஷ் ஜாவேடகர் பேசினார். இதற்கு, காங்., உறுப்பினர்கள், எதிர்ப்பு தெரிவித்ததால், அமளி ஏற்பட்டது
கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரித்து விட்டதாக கூறி, பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 2.35 ரூபாயும், டீசல் விலை, லிட்டருக்கு, 50 காசுகளும், இரண்டு நாட்களுக்கு முன், உயர்த்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, சமையல் "காஸ்' மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளையும், கணிசமாக உயர்த்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பிரச்னை, ராஜ்யசபாவில், நேற்று எதிரொலித்தது. மார்க்சிஸ்ட் உறுப்பினர், பிரசாந்தா சட்டர்ஜி, பேசியதாவது: கடந்த மூன்று மாதங்களில், இதுவரை, ஆறு முறை, பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சாதாரண மக்கள், பெரும் அவதி அடைந்துள்ளனர். மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. மத்திய அரசு, தவறு செய்து விட்டு, அதன் சுமையை, மக்கள் மீது சுமத்துகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.
பா.ஜ., உறுப்பினர், வெங்கய்யா நாயுடு,""பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடக்கும்போது, பார்லி.,க்கு வெளியில், விலை உயர்வை அறிவித்தது, தவறானது. இது, மக்கள் விரோத நடவடிக்கை. பெட்ரோல் பங்குகளை இரவு நேரத்தில் மூடுவதற்கு உத்தரவிட்டது குறித்து, விவாதம் நடத்த வேண்டும்,''என்றார்.
திரிணமுல் காங்., உறுப்பினர், டெரக் ஓ பிரெயன் பேசுகையில்,""பெட்ரோல் விலையை உயர்த்தியதன் மூலம், நாட்டு மக்கள் மீது, காங்கிரஸ் கட்சி, போர் தொடுத்துள்ளது. பெட்ரோல் பங்குகளை, இரவு நேரத்தில் அடைக்க வேண்டும் என, அமைச்சர் வீரப்ப மொய்லி கூறுவதும், மோசமான கருத்து,''என்றார்.
இந்த பிரச்னையால், கடும் அமளி ஏற்பட்டதை அடுத்து, 15 நிமிடங்களுக்கு சபை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும், சபை கூடியதும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர், சீதாராம் யெச்சூரி, மறுபடியும், இந்த பிரச்னையை எழுப்பினார். அவர் பேசுகையில்,""பெட்ரோல் விலை உயர்வை, வாபஸ் வாங்க வேண்டும். இது தொடர்பாக, சபையில், இப்போதே விவாதம் நடத்த வேண்டும்,'' என்றார்.
ராஜ்யசபா துணை தலைவர், குரியன், இதை ஏற்க மறுத்ததை அடுத்து, இடதுசாரி கட்சி உறுப்பினர்களும், திரிணமுல் காங்., உறுப்பினர்களும், சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
நிலக்கரி ஊழல் : பா.ஜ., பாய்ச்சல் : நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு குறித்த முக்கிய ஆவணங்கள் மாயமானது குறித்த பிரச்னையை, ராஜ்யசபாவில் நேற்று, பா.ஜ., எம்.பி., பிரகாஷ் ஜாவேடகர் எழுப்பினார். அவர் பேசியதாவது: நிலக்கரி ஊழல் என்பது, பிரமாண்டமான ஊழல். அது தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கேள்வி கேட்டபோது,"நான் என்ன, ஆவணங்களை காக்கும் வேலையையா செய்கிறேன்' என, பிரதமர், எரிந்து விழுகிறார். ஆவணங்களை மட்டுமல்ல; நாட்டையும் பாதுகாக்க வேண்டிய கடமை, அவருக்கு உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த இரண்டு வேலைகளையுமே, அவர், ஒழுங்காக செய்யவில்லை. இதுகுறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு, பிரகாஷ் ஜாவேடகர் பேசினார். இதற்கு, காங்., உறுப்பினர்கள், எதிர்ப்பு தெரிவித்ததால், அமளி ஏற்பட்டது
மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் சோனியா
காங்., தலைவர் சோனியா, மருத்துவ பரிசோதனைக்காக, நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
காங்., தலைவர் சோனியாவுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன், உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர், அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு, அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இதைத் தொடர்ந்து, அவ்வப்போது, அமெரிக்காவுக்கு சென்று, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம், லோக்சபாவில் உணவு பாதுகாப்பு மசோதா குறித்த ஓட்டெடுப்பு நடந்தபோது, சோனியாவுக்கு, திடீரென, உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றார். இதன்பின், சிறிது நேரத்திலேயே, டிஸ்சார்ஜ் ஆகி, வீடு திரும்பினார்.
இந்நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக, சோனியா, நேற்று அமெரிக்கா
புறப்பட்டுச் சென்று உள்ளார். அவரின் மகள், பிரியங்காவும், உடன் சென்றுள்ளார்
காங்., தலைவர் சோனியாவுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன், உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர், அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு, அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இதைத் தொடர்ந்து, அவ்வப்போது, அமெரிக்காவுக்கு சென்று, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம், லோக்சபாவில் உணவு பாதுகாப்பு மசோதா குறித்த ஓட்டெடுப்பு நடந்தபோது, சோனியாவுக்கு, திடீரென, உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றார். இதன்பின், சிறிது நேரத்திலேயே, டிஸ்சார்ஜ் ஆகி, வீடு திரும்பினார்.
இந்நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக, சோனியா, நேற்று அமெரிக்கா
புறப்பட்டுச் சென்று உள்ளார். அவரின் மகள், பிரியங்காவும், உடன் சென்றுள்ளார்
தவறை மறைக்க பழி சுமத்தும் மத்திய அரசு: அத்வானி பாய்ச்சல்
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை, பத்திரிகைகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், தன் தவறை மறைக்க, மற்றவர்கள் மீது பழி சுமத்த, மத்திய அரசு முயற்சிக்கிறது,'' என, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி கூறியுள்ளார்.
பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி கூறியுள்ளதாவது: அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையே இதற்கு காரணம். இது தொடர்பாக, பத்திரிகைகளில், மத்திய அரசுக்கு எதிராக, கடுமையான விமர்சனங்கள் வருகின்றன. மத்திய அரசு, ஊழல் அரசாகவே, அடையாளப்படுத்தப்படுகிறது. திருப்பதி, ஷீரடி, மும்பை சித்தி விநாயகர் கோவில்கள் மற்றும் கேரளாவில் உள்ள பத்மநாபசாமி கோவில் ஆகியவற்றில், பக்கதர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம், சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும், பணமாக மாற்றுவதற்கு, மத்திய அரசு முயற்சிப்பதாகவும், பத்திரிகைகளில், தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், மத்திய அரசோ, இதையெல்லாம், உணர்ந்ததாக தெரியவில்லை. தன் தவறுகளை மறைப்பதற்கு, மற்றவர்கள் மீது, மத்திய அரசு பழிபோட முயற்சிக்கிறது. இவ்வாறு, அத்வானி கூறியுள்ளார்.
பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி கூறியுள்ளதாவது: அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையே இதற்கு காரணம். இது தொடர்பாக, பத்திரிகைகளில், மத்திய அரசுக்கு எதிராக, கடுமையான விமர்சனங்கள் வருகின்றன. மத்திய அரசு, ஊழல் அரசாகவே, அடையாளப்படுத்தப்படுகிறது. திருப்பதி, ஷீரடி, மும்பை சித்தி விநாயகர் கோவில்கள் மற்றும் கேரளாவில் உள்ள பத்மநாபசாமி கோவில் ஆகியவற்றில், பக்கதர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம், சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும், பணமாக மாற்றுவதற்கு, மத்திய அரசு முயற்சிப்பதாகவும், பத்திரிகைகளில், தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், மத்திய அரசோ, இதையெல்லாம், உணர்ந்ததாக தெரியவில்லை. தன் தவறுகளை மறைப்பதற்கு, மற்றவர்கள் மீது, மத்திய அரசு பழிபோட முயற்சிக்கிறது. இவ்வாறு, அத்வானி கூறியுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)