மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டம் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, மசோதாவிற்கு பார்லிமென்ட் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனையடுத்து விரைவில் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.
ஏழை மக்களுக்கு, மலிவு விலையில் உணவு தானியங்களை வழங்கும், உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றும் அவசர சட்டத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கடந்த, ஜூலை மாதம், 5ம்தேதி, கையெழுத்திட்டார்.இந்த மசோதா, கடந்த மாதம், 26ம்தேதி, லோக்சபாவில், பலத்த விவாதத்திற்கு பிறகு நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா நேற்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மசோதாவில் திருத்தம் செய்யும் படி, இடது சாரி உள்ளிட்ட கட்சிகள் கோரியிருந்தன. இந்த மசோதா மீதான விவாதத்திற்கு பின் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் நரேஷ் அகர்வால் கொண்டு வந்த சில திருத்தங்களை வாபஸ் பெற்றுக்கொண்டார். பா.ஜ.,வின் வெங்கையா நாயுடு, பிரகாஷ் ஜாவேத்கர் ஆகியோர் தங்களது திருத்தங்கள் குறித்து வலியுறுத்தவில்லை. பின்னர் நாள் முழுவதும் நடந்த விவாதத்திற்கு பின்னர் குரல் ஓட்டெடுப்பு மூலம் உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக இந்த மசோதா மீது நடந்த விவாதத்திற்கு பதிலளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் தாமஸ், உணவு பாதுகாப்பு மசோதாவால் நாட்டின் கூட்டாட்சி முறைக்கு பாதிப்பு வராது பல மாநிலங்களில் ரேஷன் முறை சிறப்பாக உள்ளது என பல உறுப்பினர்கள் கூறினர். ரேஷன் முறை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கேரளாவில் அரிசி கிலோ ரூ. 1க்கு விற்பனை செய்யப்படுகிறது.மத்திய அரசு, அரிசியை கூடுதல் விலைக்கு வாங்கி, கிலோ ஒன்றிற்கு ரூ.24 மானியம் வழங்குகிறது. மத்திய அரசு வழங்கும் ரூ.5க்கு வழங்கும் அரிசியை மாநில அரசு ரூ.1க்கு வழங்குகிறது. மத்திய அரசிடமிருந்து, தமிழகம 36.78 டன் அரிசியை பெறுகிறது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அந்தியோஜனா திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு 20 லட்சம் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. உணவு பாதுகாப்பு சட்டத்தால், 20 லட்சம் டன் என்பது 24 லட்சம் டன்னாக உயரும். இந்த மசோதாவால் 82 கோடி மக்கள் பயன்பெறுவார்கள். மசோதாவால் கிராமப்புறங்களில் 75 சதவீதம் பேரும், நகர்ப்புறங்களில் 50 சதவீதம் பேரும் பயன்பெறுவார்கள். அவசரகதியில் உணவு பாதுகாப்பு மசோதாவை கொண்டு வரவில்லை. உணவு பாதுகாப்பு மசோதா கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதமே பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் பார்லி., நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழு பல மாநிலங்களின் கருத்துக்களை கேட்டறிந்ததது. நிலைக்குழு அளித்த தகவலின் பேரில் திருத்தங்கள் செய்யப்பட்டது என கூறினார்.
மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த மசோதாவில் நாட்டில் உள்ள 82 கோடி மக்கள் பயன்பெறுவார்கள். மேலும், 5 கிலோ அரிசி, கோதுமை மற்றும் தானியங்களை ஒருவருக்கு தலா ரூ.3,2,1 என்ற அளவில் வழங்கப்படுவதை மசோதா உறுதி செய்யும்
ஏழை மக்களுக்கு, மலிவு விலையில் உணவு தானியங்களை வழங்கும், உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றும் அவசர சட்டத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கடந்த, ஜூலை மாதம், 5ம்தேதி, கையெழுத்திட்டார்.இந்த மசோதா, கடந்த மாதம், 26ம்தேதி, லோக்சபாவில், பலத்த விவாதத்திற்கு பிறகு நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா நேற்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மசோதாவில் திருத்தம் செய்யும் படி, இடது சாரி உள்ளிட்ட கட்சிகள் கோரியிருந்தன. இந்த மசோதா மீதான விவாதத்திற்கு பின் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் நரேஷ் அகர்வால் கொண்டு வந்த சில திருத்தங்களை வாபஸ் பெற்றுக்கொண்டார். பா.ஜ.,வின் வெங்கையா நாயுடு, பிரகாஷ் ஜாவேத்கர் ஆகியோர் தங்களது திருத்தங்கள் குறித்து வலியுறுத்தவில்லை. பின்னர் நாள் முழுவதும் நடந்த விவாதத்திற்கு பின்னர் குரல் ஓட்டெடுப்பு மூலம் உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக இந்த மசோதா மீது நடந்த விவாதத்திற்கு பதிலளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் தாமஸ், உணவு பாதுகாப்பு மசோதாவால் நாட்டின் கூட்டாட்சி முறைக்கு பாதிப்பு வராது பல மாநிலங்களில் ரேஷன் முறை சிறப்பாக உள்ளது என பல உறுப்பினர்கள் கூறினர். ரேஷன் முறை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கேரளாவில் அரிசி கிலோ ரூ. 1க்கு விற்பனை செய்யப்படுகிறது.மத்திய அரசு, அரிசியை கூடுதல் விலைக்கு வாங்கி, கிலோ ஒன்றிற்கு ரூ.24 மானியம் வழங்குகிறது. மத்திய அரசு வழங்கும் ரூ.5க்கு வழங்கும் அரிசியை மாநில அரசு ரூ.1க்கு வழங்குகிறது. மத்திய அரசிடமிருந்து, தமிழகம 36.78 டன் அரிசியை பெறுகிறது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அந்தியோஜனா திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு 20 லட்சம் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. உணவு பாதுகாப்பு சட்டத்தால், 20 லட்சம் டன் என்பது 24 லட்சம் டன்னாக உயரும். இந்த மசோதாவால் 82 கோடி மக்கள் பயன்பெறுவார்கள். மசோதாவால் கிராமப்புறங்களில் 75 சதவீதம் பேரும், நகர்ப்புறங்களில் 50 சதவீதம் பேரும் பயன்பெறுவார்கள். அவசரகதியில் உணவு பாதுகாப்பு மசோதாவை கொண்டு வரவில்லை. உணவு பாதுகாப்பு மசோதா கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதமே பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் பார்லி., நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழு பல மாநிலங்களின் கருத்துக்களை கேட்டறிந்ததது. நிலைக்குழு அளித்த தகவலின் பேரில் திருத்தங்கள் செய்யப்பட்டது என கூறினார்.
மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த மசோதாவில் நாட்டில் உள்ள 82 கோடி மக்கள் பயன்பெறுவார்கள். மேலும், 5 கிலோ அரிசி, கோதுமை மற்றும் தானியங்களை ஒருவருக்கு தலா ரூ.3,2,1 என்ற அளவில் வழங்கப்படுவதை மசோதா உறுதி செய்யும்