"ஊழல் குற்றச்சாட்டின் நிழலில், காலம் தள்ள விரும்பவில்லை. சூரியசக்தி மின்சார பேனல் முறைகேடு தொடர்பாக, எந்த விசாரணைக்கும் தயார்,'' என, கேரள முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, உம்மன் சாண்டி கூறியுள்ளார்.
பல கோடி முறைகேடு : கேரளாவில், சூரியசக்தி மின்சார பேனல் தயாரித்து தருவதாக கூறி, சரிதா நாயர் என்ற பெண், ஏராளமானோரிடம், பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக, புகார் எழுந்தது.
இந்த ஊழலில், முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, உம்மன் சாண்டிக்கும், அவரின் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கும், தொடர்பு உள்ளதாக, பிரதான எதிர்க்கட்சியான, இடதுசாரி கூட்டணியினர், போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து, சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். மாநில அரசும், விசாரணை கமிஷன் அமைத்துள்ளது. ஆனாலும்,"முறைகேட்டுக்கு பொறுப்பேற்று, முதல்வர் உம்மன் சாண்டி, தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில், ஆளும், காங்., கூட்டணியில் உள்ள தலைவர்களுக்கு இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆளும் கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம், திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது.
பல கோடி முறைகேடு : கேரளாவில், சூரியசக்தி மின்சார பேனல் தயாரித்து தருவதாக கூறி, சரிதா நாயர் என்ற பெண், ஏராளமானோரிடம், பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக, புகார் எழுந்தது.
இந்த ஊழலில், முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, உம்மன் சாண்டிக்கும், அவரின் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கும், தொடர்பு உள்ளதாக, பிரதான எதிர்க்கட்சியான, இடதுசாரி கூட்டணியினர், போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து, சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். மாநில அரசும், விசாரணை கமிஷன் அமைத்துள்ளது. ஆனாலும்,"முறைகேட்டுக்கு பொறுப்பேற்று, முதல்வர் உம்மன் சாண்டி, தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில், ஆளும், காங்., கூட்டணியில் உள்ள தலைவர்களுக்கு இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆளும் கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம், திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது.