"தெலுங்கானா மாநிலம் தேவையில்லை; ஒருங்கிணைந்த ஆந்திரா அவசியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளைச் சேர்ந்த, 15 அமைச்சர்கள், 40 எம்.எல். ஏ.,க்கள், 15 எம்.எல்.சி.,க்கள், நேற்று, ஐதராபாத் நகரில், மாநில சட்டசபை முன், நான்கு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். "ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும்' என, ஜூலை 30ல், மத்திய அரசு அறிவித்ததில் இருந்து, அம்மாநிலத்தில் இரு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்