மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் சோனியா

 காங்., தலைவர் சோனியா, மருத்துவ பரிசோதனைக்காக, நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
காங்., தலைவர் சோனியாவுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன், உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர், அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு, அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இதைத் தொடர்ந்து, அவ்வப்போது, அமெரிக்காவுக்கு சென்று, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம், லோக்சபாவில் உணவு பாதுகாப்பு மசோதா குறித்த ஓட்டெடுப்பு நடந்தபோது, சோனியாவுக்கு, திடீரென, உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றார். இதன்பின், சிறிது நேரத்திலேயே, டிஸ்சார்ஜ் ஆகி, வீடு திரும்பினார். 
இந்நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக, சோனியா, நேற்று அமெரிக்கா 
புறப்பட்டுச் சென்று உள்ளார். அவரின் மகள், பிரியங்காவும், உடன் சென்றுள்ளார்