தெலுங்கானா விவகாரம் நேற்று மீண்டும் பார்லிமென்டில் எதிரொலித்தது. லோக்சபாவில், இந்தப் பிரச்னையை எழுப்பி அமளியில் ஈடுபட்ட, காங்கிரஸ் எம்.பி.,க்கள், ஐந்து பேர், தெலுங்கு தேசம் எம்.பி.,க்கள், நான்கு பேர் என, மொத்தம், ஒன்பது எம்.பி.,க்களை, சபாநாயகர் மீராகுமார், "சஸ்பெண்ட்' செய்தார்.இருந்தாலும், சபையிலிருந்து வெளியேறாமல், அந்த எம்.பி.,க்கள் ரகளையில் ஈடுபட்டதால், லோக்சபா நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. இதேபோல், ராஜ்யசபாவிலும், அமளியில் ஈடுபட்ட, தெலுங்கு தேச எம்.பி.,க்கள் இருவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தெலுங்கானா மாநிலம்:ஆந்திராவை பிரித்து தெலுங்கான தனி மாநிலம் உருவாக்க, காங்கிரஸ் செயற்குழுவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் முடிவு செய்தன. இதற்கு, ஆந்திராவின் கடலோர பகுதிகள் மற்றும் ராயலசீமா பகுதிகளைச் சேர்ந்த, அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர், கடந்த மாதம், 5ம் தேதி துவங்கியது. அன்று முதல், தெலுங்கானா பிரச்னையை எழுப்பி, காங்கிரஸ் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் எம்.பி.,க்கள் ரகளையில் ஈடுபட்டு வந்தனர். அதனால், உணவு பாதுகாப்பு மசோதா மற்றும் நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை, லோக்சபாவில் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உருவானது.
தெலுங்கானா மாநிலம்:ஆந்திராவை பிரித்து தெலுங்கான தனி மாநிலம் உருவாக்க, காங்கிரஸ் செயற்குழுவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் முடிவு செய்தன. இதற்கு, ஆந்திராவின் கடலோர பகுதிகள் மற்றும் ராயலசீமா பகுதிகளைச் சேர்ந்த, அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர், கடந்த மாதம், 5ம் தேதி துவங்கியது. அன்று முதல், தெலுங்கானா பிரச்னையை எழுப்பி, காங்கிரஸ் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் எம்.பி.,க்கள் ரகளையில் ஈடுபட்டு வந்தனர். அதனால், உணவு பாதுகாப்பு மசோதா மற்றும் நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை, லோக்சபாவில் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உருவானது.
முதலில் ஐந்து நாட்கள்:
இதையடுத்து, ஆந்திராவை சேர்ந்த, 12 எம்.பி.,க்கள், கடந்த மாதம், 23ம் தேதி, ஐந்து நாட்களுக்கு, சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதன்பின், உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஐந்து நாள், சஸ்பெண்ட் நடவடிக்கை முடிந்து, அந்த எம்.பி.,க்கள், கடந்த வெள்ளியன்று மீண்டும் சபைக்கு வந்தனர். அதன்பின், மீண்டும் தெலுங்கானா பிரச்னையை எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர்.இந்நிலையில், நேற்று காலை, லோக்சபா கூடியதும், ஓய்வூதிய மசோதாவை தாக்கல் செய்ய, மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் தயாராக இருந்தார். ஆனால், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த, நான்கு எம்.பி.,க்கள், சபையின் மையத்திற்கு வந்து, தெலுங்கானா தனி மாநில பிரிவினைக்கு எதிராக கோஷமிட்டனர்.அத்துடன், நான்கு எம்.பி.,க்களில், ஒருவரான, சிவபிரசாத், முன்னாள் பிரதமர் இந்திராவின் முகமூடியை மாட்டியபடி, சபையை வலம் வந்து கோஷமிட்டார்.
தெலுங்கானா போராட்டத்தை, இதற்கு முன், பிசுபிசுக்க வைத்தவர், இந்திரா என்பதால், அவர் இவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது. சிவபிரசாத்தின் செயலுக்கு, காங்கிரஸ் எம்.பி.,க்கள், பெரிய அளவில் எதிர்ப்புத் தெரிவித்ததால், அவர் முகமூடியை கழற்ற வேண்டிய நிலை உருவானது.இதற்கிடையில், ஆந்திராவை சேர்ந்த, காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஐந்து பேரும், சபையின் மையத்திற்கு வந்து, "ஒன்றுபட்ட ஆந்திராவே எங்களுக்கு தேவை; எங்களுக்கு நீதி வேண்டும்' என, கோஷமிட்டனர்.இதையடுத்து, அமளியில் ஈடுபட்ட, ஆந்திர காங்., - எம்.பி.,க்கள், ஐந்து பேர், தெலுங்கு தேசம் எம்.பி.,க்கள் நான்கு பேர் என, மொத்தம், ஒன்பது பேரை, ஐந்து நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக, சபாநாயகர் மீராகுமார் அறிவித்தார்.
தெலுங்கானா போராட்டத்தை, இதற்கு முன், பிசுபிசுக்க வைத்தவர், இந்திரா என்பதால், அவர் இவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது. சிவபிரசாத்தின் செயலுக்கு, காங்கிரஸ் எம்.பி.,க்கள், பெரிய அளவில் எதிர்ப்புத் தெரிவித்ததால், அவர் முகமூடியை கழற்ற வேண்டிய நிலை உருவானது.இதற்கிடையில், ஆந்திராவை சேர்ந்த, காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஐந்து பேரும், சபையின் மையத்திற்கு வந்து, "ஒன்றுபட்ட ஆந்திராவே எங்களுக்கு தேவை; எங்களுக்கு நீதி வேண்டும்' என, கோஷமிட்டனர்.இதையடுத்து, அமளியில் ஈடுபட்ட, ஆந்திர காங்., - எம்.பி.,க்கள், ஐந்து பேர், தெலுங்கு தேசம் எம்.பி.,க்கள் நான்கு பேர் என, மொத்தம், ஒன்பது பேரை, ஐந்து நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக, சபாநாயகர் மீராகுமார் அறிவித்தார்.
ஒத்திவைப்பு:
"லோக்சபா ஒழுங்கு நடவடிக்கை விதி எண், 374 ஏ-ன் கீழ், சபை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்தல், கோஷங்கள் போடுதல் மற்றும் அலுவல்கள் மேற்கொள்ள விடாமல் தடுத்தல் போன்ற குற்றங்களுக்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றும் அவர் கூறினார். அத்துடன், சபை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.அப்போது, சஸ்பெண்ட் செய்யப்பட்ட தெலுங்கு தேச எம்.பி.,க்கள் நான்கு பேர் மட்டும், சபையை விட்டு வெளியேறாமல், உள்ளேயே அமர்ந்திருந்தனர்.மீண்டும் சபை கூடிய போது, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.,க்கள் அமளியில் இறங்கினர். அவர்கள் அரசுக்கு எதிராக, கோஷமிட ஆரம்பித்தவுடன், அமளி உருவானது.
தொடர் கோஷம்:
அப்போது, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆந்திர எம்.பி.,க்களுடன், அவர்களும் சேர்ந்து கோஷமிட்டதால், சபையை நடத்த முடியாத சூழ்நிலை உருவானது. இதையடுத்து, நாள் முழுவதற்கும் சபை ஒத்திவைக்கப்பட்டது. பார்லிமென்டின் ஒரு கூட்டத் தொடரில், ஒரு முறை சஸ்பெண்ட் செய்யப்பட்ட, எம்.பி.,க்கள், மீண்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது இது முதல் முறை எனக் கூறப்படுகிறது.இதேபோல், ராஜ்யசபாவிலும், தெலுங்கானா பிரச்னையை எழுப்பி, அமளியில் ஈடுபட்ட, தெலுங்கு தேச எம்.பி.,க்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அமளியில் ஈடுபட்ட, காங்கிரஸ் எம்.பி.,க்கள், ஐந்து பேர், தெலுங்கு தேசம் எம்.பி.,க்கள், நான்கு பேர் என, மொத்தம், ஒன்பது எம்.பி.,க்களை, சபாநாயகர் மீராகுமார், "சஸ்பெண்ட்' செய்தார்