தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்குவது தொடர்பான தீர்மானத்திற்கு, அடுத்த சில வாரங்களில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறினார்.
டில்லியில் நேற்று நிருபர்களிடம் பேசிய, ஷிண்டே கூறியதாவது: ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பான தீர்மானத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்காக, அமைச்சரவை குறிப்பு ஒன்றை, நாங்கள் தயாரித்து வருகிறோம். இந்த குறிப்பு தயாரானதும், சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின், 20 நாட்களுக்குள், மத்திய அமைச்சரவையில் அது சமர்ப்பிக்கப்படும்.
தெலுங்கானா தீர்மானத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும், ஆந்திராவை பிரிப்பதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து, ஆய்வு செய்ய, அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். அந்தக் குழுவின் ஆய்வுக்குப் பின், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த தீர்மானம், ஆந்திர மாநில சட்டசபைக்கு அனுப்பி வைக்கப்படும். தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டால், அது நாட்டின், 29வது மாநிலமாக இருக்கும். இவ்வாறு ஷிண்டே கூறினார்.
டில்லியில் நேற்று நிருபர்களிடம் பேசிய, ஷிண்டே கூறியதாவது: ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பான தீர்மானத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்காக, அமைச்சரவை குறிப்பு ஒன்றை, நாங்கள் தயாரித்து வருகிறோம். இந்த குறிப்பு தயாரானதும், சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின், 20 நாட்களுக்குள், மத்திய அமைச்சரவையில் அது சமர்ப்பிக்கப்படும்.
தெலுங்கானா தீர்மானத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும், ஆந்திராவை பிரிப்பதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து, ஆய்வு செய்ய, அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். அந்தக் குழுவின் ஆய்வுக்குப் பின், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த தீர்மானம், ஆந்திர மாநில சட்டசபைக்கு அனுப்பி வைக்கப்படும். தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டால், அது நாட்டின், 29வது மாநிலமாக இருக்கும். இவ்வாறு ஷிண்டே கூறினார்.