இட ஒதுக்கீடு: மாயாவதி காரசாரம்

அரசு பணிகளில், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட திருத்தம் கோரி, பகுஜன் சமாஜ் தலைவர், மாயாவதி, ராஜ்யசபாவில் நேற்று காரசாரமாக பேசினார். ""அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடுக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவை, பல மாநில அரசுகள் பின்பற்றத் துவங்கி விட்டன. இது குறித்து அரசியல் சட்ட திருத்தம், ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது; லோக்சபாவில் நிலுவையில் உள்ளது.
அதை விரைந்து நிறைவேற்ற வேண்டும்,'' என, மாயாவதி கூறினார். அவருக்கு ஆதரவாக, அவர் கட்சி, எம்.பி.,க்கள் குரல் கொடுத்ததால், சபையில், கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. சட்ட அமைச்சர், கபில்சிபல், ""சுப்ரீம் கோர்ட் உத்தரவை மறுஆய்வு செய்ய, மேல் முறையீடு செய்துள்ளோம்; லோக்சபாவிலும் திருத்தத்தை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும்,'' என்றார். எனினும், அதை கேட்காமல், பகுஜன் சமாஜ், எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதால், சபை, பத்து நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.