பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானிக்கு எதிரான மனு, முன் கூட்டியே விசாரிக்கப்படும்' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில், சதி செய்ததாக, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி மற்றும் 19 பேருக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை, அலகாபாத் ஐகோர்ட், ரத்து செய்தது. இதை எதிர்த்து, சி.பி.ஐ., சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், மேல் முறையீடு செய்யப்பட்டது. "இந்த வழக்கின் விசாரணை, டிசம்பரிலிருந்து துவங்கும்' என, சுப்ரீம் கோர்ட், ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், "இந்த வழக்கை, முன் கூட்டியே விசாரிக்க வேண்டும்' என, சி.பி.ஐ., தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில், புதிதாக, ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி, ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான,"பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தபோது, "முன் கூட்டியே விசாரிப்பதற்கு, அத்வானி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து, அத்வானி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட டிசம்பருக்கு பதிலாக, அக்டோபர் மாதம், முதல் வாரத்திலிருந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என, நீதிபதிகள் தெரிவித்தனர்