மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை, பத்திரிகைகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், தன் தவறை மறைக்க, மற்றவர்கள் மீது பழி சுமத்த, மத்திய அரசு முயற்சிக்கிறது,'' என, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி கூறியுள்ளார்.
பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி கூறியுள்ளதாவது: அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையே இதற்கு காரணம். இது தொடர்பாக, பத்திரிகைகளில், மத்திய அரசுக்கு எதிராக, கடுமையான விமர்சனங்கள் வருகின்றன. மத்திய அரசு, ஊழல் அரசாகவே, அடையாளப்படுத்தப்படுகிறது. திருப்பதி, ஷீரடி, மும்பை சித்தி விநாயகர் கோவில்கள் மற்றும் கேரளாவில் உள்ள பத்மநாபசாமி கோவில் ஆகியவற்றில், பக்கதர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம், சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும், பணமாக மாற்றுவதற்கு, மத்திய அரசு முயற்சிப்பதாகவும், பத்திரிகைகளில், தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், மத்திய அரசோ, இதையெல்லாம், உணர்ந்ததாக தெரியவில்லை. தன் தவறுகளை மறைப்பதற்கு, மற்றவர்கள் மீது, மத்திய அரசு பழிபோட முயற்சிக்கிறது. இவ்வாறு, அத்வானி கூறியுள்ளார்.
பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி கூறியுள்ளதாவது: அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையே இதற்கு காரணம். இது தொடர்பாக, பத்திரிகைகளில், மத்திய அரசுக்கு எதிராக, கடுமையான விமர்சனங்கள் வருகின்றன. மத்திய அரசு, ஊழல் அரசாகவே, அடையாளப்படுத்தப்படுகிறது. திருப்பதி, ஷீரடி, மும்பை சித்தி விநாயகர் கோவில்கள் மற்றும் கேரளாவில் உள்ள பத்மநாபசாமி கோவில் ஆகியவற்றில், பக்கதர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம், சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும், பணமாக மாற்றுவதற்கு, மத்திய அரசு முயற்சிப்பதாகவும், பத்திரிகைகளில், தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், மத்திய அரசோ, இதையெல்லாம், உணர்ந்ததாக தெரியவில்லை. தன் தவறுகளை மறைப்பதற்கு, மற்றவர்கள் மீது, மத்திய அரசு பழிபோட முயற்சிக்கிறது. இவ்வாறு, அத்வானி கூறியுள்ளார்.